சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தொடரப்படும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் வழக்கு ஆவணங்களை உச்சநீதிமன்ற உத்தரவுபடி திரும்ப கொடுக்க மறுத்து வருவதாகவும், அவர் நினைக்கும் பொழுது ஆவணங்களை ஒப்படைப்பதாக தெரிவித்ததாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதனால் புதிதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பொன்மாணிக்கவேலுக்கு எதிராக செய்யப்போவதாகவும் வலியுறுத்தப்பட்டது.